செய்திகள்
பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் தவறி விழுந்து பலி
பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 65). இவர் கடந்த 26-ந் தேதி தனது பேரன் மகேந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மானூருக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை மகேந்திரன் ஓட்டினார். அவர்கள் மானூர் அருகே சென்ற போது அங்குள்ள சாலையோர பள்ளத்தில் குழந்தைசாமி தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.