செய்திகள்
கோப்புபடம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மடி ஏந்தி அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்

Published On 2021-02-25 10:19 GMT   |   Update On 2021-02-25 10:19 GMT
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மடி ஏந்தி அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை:

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியராக்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்குடையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் சாந்தி தலைமையில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தை தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்களாகிய நாங்கள் சிறப்பாக அமல்படுத்தி வருகிறோம். பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்து வருகிறோம். குழந்தைகள், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் நலனை பேணுவதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மிக சிறந்த பணியாற்றி வருகின்றனர்.

இப்படி பணியாற்றி வரும் நாங்கள் முறையான காலமுறை ஊதியம், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போன்றே அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். ரூ.10 லட்சம்

பணி ஓய்வின்போது பணிக்கொடையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அந்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை இதனால் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பாரி, கும்மி, முக்காடு போன்ற போரட்டங்களை தொடர்ந்து 4-வது நாளான இன்று (25-ந்தேதி) மடி ஏந்தி கேட்டும் போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News