செய்திகள்
சிக்கலில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
சிக்கல் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:-
நாகை அருகே சிக்கல் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சிக்கல் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது சிக்கல் கோவில் ஆர்ச் அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நாகூர் சிவன் மேலவீதியை சேர்ந்த ஹசனா மரைக்காயர் (47) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.230 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.