செய்திகள்
ராமநாதபுரத்தில் இரு தரப்பினர் மோதலில் 4 பேர் படுகாயம்: 4 பேர் கைது
ராமநாதபுரத்தில் இரு தரப்பினர் மோதலில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் நேரு நகரைச் சேர்ந்தவர் முருகன் முரளிபாபு (வயது 39). இவர் தனது வீட்டின் அருகே சந்தேகப்படும்படி நின்றதாக கூறி அதே பகுதியை சேர்ந்த சரவணனை கண்டித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. இதில் முருகன் முரளிபாபு, இவரின் தாய் நாகவள்ளி ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நாகவள்ளி அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து விட்டதாக புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் சரவணன், லட்சுமி ஆகியோரும் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து சரவணன் தரப்பை சேர்ந்த சடையன் வலசை அஜித்குமார், மகாசக்திநகர் அன்பரசன் ஆகியோரை கைது செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் கொடுத்த புகாரின்பேரில் மற்றொரு வழக்குப்பதிவு செய்து முருகன்முரளிபாபு தரப்பை சேர்ந்த பசும்பொன் நகர் செல்வகுமார் (21), சேட்இப்ராகிம் நகரை சேர்ந்த நந்தீஸ்குமார் (31) ஆகியோரை கைது செய்தனர்.