செய்திகள்
கோவையில் நேற்று புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 368-ஆக உயர்ந்து உள்ளது.
கோவை:
கோவையில் நேற்று புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்படி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 368-ஆக உயர்ந்து உள்ளது. கோவையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவுக்கு உயிர்பலி எதுவும் இல்லை.
கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 45 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதன் மூலம் கோவையில் இதுவரை 54 ஆயிரத்து 282 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 407 பேர் சிகிச்சையில் உள்ளனர்.