செய்திகள்
தற்கொலை

மண்டைக்காடு அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் தொழிலாளி தற்கொலை

Published On 2021-02-19 23:13 GMT   |   Update On 2021-02-19 23:13 GMT
மண்டைக்காடு அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு அருகே பரவன்காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 41). சமையல் தொழிலாளி. இவர் ஒரு ஆண்டுக்கு முன் தக்கலை பகுதியில் இயங்கும் சுயஉதவிக்குழுவில் இருந்து ரூ.10 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். அதில் ஒரு பகுதியை மட்டுமே கண்ணன் திருப்பி செலுத்தியதாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் கடனை அடைக்க முடியாமல் கண்ணன் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் சுய உதவிக்குழுவினர் கடனை வசூலிக்க கண்ணன் வீட்டுக்கு வந்தனர். அப்போது கண்ணன் பணம் இல்லை என்று கூறியுள்ளார். கடன் வாங்கிய தொகையை திருப்பி செலுத்தும்படி அவர்கள் கண்டிப்புடன் கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த கண்ணன் வீட்டு அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவருடைய மனைவி முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுய உதவிக்குழு கடனை திருப்பி செலுத்த முடியாமல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மண்டைக்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட கண்ணனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News