செய்திகள்
மின்தடை

திருப்பூரில் நாளை மின்தடை

Published On 2021-02-19 01:32 GMT   |   Update On 2021-02-19 08:34 GMT
திருப்பூர் சந்தைபேட்டை துணை மின் நிலையம், கலெக்டர் அலுவலக துணை மின் நிலையம், அருள்புரம் துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது
திருப்பூர்:

தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருப்பூர் சந்தைபேட்டை துணை மின் நிலையம், கலெக்டர் அலுவலக துணை மின் நிலையம், அருள்புரம் துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அரண்மனைபுதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர்., பட்டுக்கோட்டையார் நகர், திருவிக நகர், கவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டிநகர்., கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மி ஷின் வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட், ராயபுரம், ஸ்டேட் வங்கி காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின்ரோடு,

பூம்புகார், இந்திராநகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதிநகர், குளத்துப்பாளையம், செல்வ லட்சுமி நகர், வீரபாண்டி, பொது சுத்திகரிப்பு நிலையம், கருப்பகவுண்டம்பாளையம், கே.ஆர்.ஆர்.தோட்டம்,அருள்புரம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், அண்ணாநகர், லட்சுமிநகர், செந்தூரன்காலனி, குங்குமபாளையம்,சேடர்பாளையம் ரோடு, சேகாம்பாளையம், அய்யாவுநகர், பல்லடம் ரோடு, சின்னக்கரை, செட்டிதோட்டம், ஓம்சக்திநகர், கங்காநகர், சிரபுஞ்சிநகர், கிரீன்பார்க் ராயல் அவென்யூ, சவுடேஸ்வரி நகர், குன்னாக்கல்பாளையம், கணபதிபாளையம், வாய்க்கால்மேடு, சிந்து கார்டன், கே.என்.எஸ்.கார்டன், ஆர்.ஆர்.கார்டன் , செட்டிபாளையம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News