செய்திகள்
கைது

கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

Published On 2021-02-17 09:45 GMT   |   Update On 2021-02-17 09:45 GMT
நெல்லை அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுடலைக்கண்ணு தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். செல்வி அம்மன் கோவில் பகுதியில் 3 பேர் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கிட்டா என்ற நவநீதகிருஷ்ணன் (வயது 29), இசக்கிமுத்து (29), மணிகண்டன் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News