செய்திகள்
முசிறி அருகே மது விற்ற வாலிபர் கைது
முசிறி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி:
முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் முசிறி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முசிறி அருகே ஆணைப்படியில் சுதாகர்(வயது 28) என்பவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், சுதாகரை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.