செய்திகள்
கோப்புபடம்

இளையான்குடி அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2021-02-14 12:10 GMT   |   Update On 2021-02-14 12:10 GMT
இளையான்குடி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:

இளையான்குடி அருகே மாணிக்கவாசக நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 58). தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இளையான்குடி புறவழிச்சாலையில் மொபட்டில் சென்றார். 

எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் இறந்தார். இது குறித்து இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News