செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2021-02-12 01:15 GMT   |   Update On 2021-02-12 01:15 GMT
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:

சென்னை தண்டையார்பேட்டை ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் குமார். இவர் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மார்க்கெட் பகுதியில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான கவுதம் (வயது 21) கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

குமார் வெளியே சென்றதால் கடையில் கவுதம் இருந்தார். அப்போது மின்விசிறி சுவிட்ச்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆர்.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News