செய்திகள்
நொய்யல் அருகே மருத்துவ பரிசோதனை முகாம்
நொய்யல் அருகே குந்தாணிபாளையத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நொய்யல்:
நொய்யல் அருகே குந்தாணிபாளையத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுதமதி தலைமையில், மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் குறித்து பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு சர்க்கரை தடுப்பு மாத்திரை, ரத்த அழுத்த மாத்திரை, சத்து மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கினர். முகாமில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.