செய்திகள்
தற்கொலை

திருவள்ளூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-02-09 11:26 GMT   |   Update On 2021-02-09 11:26 GMT
திருவள்ளூர் அருகே கை, கால் வீக்கத்துடன் வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது55). கூலித்தொழிலாளி. கடந்த ஒரு மாதமாக சண்முகம், கை, கால் வீக்கத்துடன் வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வலி குணமாக வில்லை. 

இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி வீட்டில் இருந்த சண்முகம் வலி தீராத ஏக்கத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகம் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News