செய்திகள்
கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2021-02-06 10:02 GMT   |   Update On 2021-02-06 10:02 GMT
விழுப்புரத்தில் அனுமதியின்றி லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்

விழுப்புரம் பாப்பான்குளம் ரெயில்வே கேட் அருகில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்கிற மணிகண்டன் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் மற்றும் ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த பாலா என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News