செய்திகள்
கோப்புபடம்

திருக்கோவிலூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2021-02-05 14:53 GMT   |   Update On 2021-02-05 14:57 GMT
திருக்கோவிலூர் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் 5 முனை சந்திப்பில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அண்ணா நகரை சேர்ந்த கண்ணன் (வயது 52) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News