செய்திகள்
கோப்புபடம்

பென்னாகரம் அருகே பள்ளி மாணவியை கடத்திய டிரைவர் கைது

Published On 2021-02-01 10:47 GMT   |   Update On 2021-02-01 10:47 GMT
பென்னாகரம் அருகே பள்ளி மாணவியை கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த நாகமரையை சேர்ந்தவர் சின்னமுத்து. இவருடைய மகன் விஜய் (வயது 24). கார் டிரைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த நெருப்பூர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 26-ந்் தேதி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் லதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த டிரைவர் விஜய்யை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News