செய்திகள்
பேராவூரணி அருகே விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பேராவூரணி அருகே விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேராவூரணி:
டெல்லியில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் பேராவூரணியில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கருப்பையா, ராஜாமுகமது, திராவிடர் விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம், காங்கிரஸ் கட்சி நிர்வாகி சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.