செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15, 166 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 112 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 15, 008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 46 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 100-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் 6 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15, 172 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.