செய்திகள்
திருப்பூரில் பனிப்பொழிவு காரணமாக முகப்பு விளக்குடன் வாகனம் வந்ததை படத்தில் காணலாம்.

திருப்பூரில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு- நடைபயிற்சிக்கு சென்றவர்கள் அவதி

Published On 2021-01-25 06:52 GMT   |   Update On 2021-01-25 14:25 GMT
திருப்பூர் பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு இருந்து வருவதால், நடைபயிற்சிக்கு செல்கிறவர்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
திருப்பூர்:

பனி இல்லாத மார்கழியா? என்ற அளவிற்கு மார்கழி மாதம் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். மாலையில் இருந்தே காலை வரை பனி அதிகமாக இருப்பதை இந்த மாதத்தில் உணர முடியும். பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்த மாதம் அதிகமான குளிர் இருக்கும். கடந்த மாதம் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் பனிமயமாக காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்து, இத்தனை நாட்கள் ஆகியும் திருப்பூர் மாவட்டத்தில் பனியின் தாக்கம் குறையவில்லை. அதிகாலை மற்றும் காலை நேரங்களில் இங்கு நிலவும் கடும் பனிப்பொழிவு, புகை மூட்டம் போன்று காட்சியளித்து வருகிறது.

இதன் காரணமாக அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். குளிர்காலம் இன்னமும் முடிவுக்கு வராததால் காலையில் நடைபயிற்சிக்கு சென்று வருகிற முதியவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மாநகர் பகுதிகளில் உள்ள ரோட்டோர கடைகளில் ஸ்வெட்டர் உள்ளிட்ட குளிர்கால ஆடைகள் மற்றும் பொருட்கள் விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது. எப்போது இந்த குளிர்காலம் முடிவுக்கு வரும் என பலரும் எதிர்பார்த்தபடி இருக்கிறார்கள்.
Tags:    

Similar News