செய்திகள்
கைது

வலங்கைமான் அருகே தாயை காயப்படுத்திய தொழிலாளி கைது

Published On 2021-01-24 14:37 GMT   |   Update On 2021-01-24 14:37 GMT
வலங்கைமான் அருகே தகராறில் தாயை கீழே தள்ளி விட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வலங்கைமான்:

வலங்கைமான்- கும்பகோணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது42). சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த மகாலிங்கத்தை அவரது தாய் அனுசியா கண்டித்தார். இதனால் தாய்- மகன் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த மகாலிங்கம் தனது தாயை கீழே தள்ளி விட்டதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.
Tags:    

Similar News