செய்திகள்
திண்டிவனத்தில் காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை
திண்டிவனத்தில் காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒலக்கூர் அருகே உள்ள கீழ்ஆதனூர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 33). பிளஸ்-2 வரை படித்துள்ள, இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோடீஸ்வரி (25). எம்.எஸ்சி., பி.எட் பட்டதாரி ஆவார்.
இருவரும் காதலித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெகதீஷ் (7), ரோகித்(4) என 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல், ஜானகிராமன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோடீஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் மாலையில், அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒலக்கூர் அருகே உள்ள கீழ்ஆதனூர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 33). பிளஸ்-2 வரை படித்துள்ள, இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோடீஸ்வரி (25). எம்.எஸ்சி., பி.எட் பட்டதாரி ஆவார்.
இருவரும் காதலித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெகதீஷ் (7), ரோகித்(4) என 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல், ஜானகிராமன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோடீஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் மாலையில், அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.