செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

கோவை கோனியம்மன் கோவிலில் முதலமைச்சர் சாமி தரிசனம்

Published On 2021-01-23 03:12 GMT   |   Update On 2021-01-23 03:12 GMT
கோவை கோனியம்மன் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.
கோவை:

தமிழக சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தார்.கோவை விமான நிலையத்தில் அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இன்று காலை கோவை கோனியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து கோவையில் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்.
Tags:    

Similar News