செய்திகள்
திருச்செங்கோடு அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செங்கோடு அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே சக்தி நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராசு மகன் மதன்குமார் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. சிவில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். அடிக்கடி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு போட்டுக்கொண்டார். இவரை திருச்செங்கோடு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து செல்வராசு கொடுத்த புகாரின்பேரில் திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.