செய்திகள்
கோப்புபடம்

கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2021-01-21 08:58 GMT   |   Update On 2021-01-21 08:58 GMT
கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:

கரூர் பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமாநிலையூர் அமராவதி ஆற்றுப் பகுதியின் அடியில் கஞ்சா வைத்து விற்றுக் கொண்டிருந்த திருமாநிலையூரை சேர்ந்த கபாலி என்கிற லட்சுமணன் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் அவரிடமிருந்த கஞ்சா பொட்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News