செய்திகள்
சூலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி
சூலூர் அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
சூலூர்:
சூலூரை அடுத்த காடாம்பாடி பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (வயது 59). தச்சு வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காங்கேயம் பாளையம் பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடைக்கு சென்றார். பின்னர் அப்பகுதியில் உள்ள திருச்சி சாலையை கடக்க முயன்ற போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் காடாம்பாடி பகுதியை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் சந்தோஷ் (22) என தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூரை அடுத்த காடாம்பாடி பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (வயது 59). தச்சு வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காங்கேயம் பாளையம் பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடைக்கு சென்றார். பின்னர் அப்பகுதியில் உள்ள திருச்சி சாலையை கடக்க முயன்ற போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் காடாம்பாடி பகுதியை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் சந்தோஷ் (22) என தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.