செய்திகள்
தற்கொலை

பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-18 18:17 GMT   |   Update On 2021-01-18 18:17 GMT
பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நல்லூர்:

திருப்பூர் முத்தணம்பாளையம் வாய்க்கால் மேடு அருகே வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மகன் பிரபாகரன் (வயது 24).இவர் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கித்தரும்படி கேட்டுள்ளார். பெற்றோர் வாங்கித்தர மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.அதில் மனம் உடைந்த பிரபாகரன் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். இதனால் பெற்றோர் தூங்க சென்று விட்டார் என நினைத்து விட்டுவிட்டனர்.

மறுநாள் காலை வெகு நேரமாகியும் கதவு திறக்காததால்சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரபாகரன் வீட்டின் மேற்கூரை விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஊரகப்போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிரபாகரனின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News