செய்திகள்
விபத்து பலி

குருபரப்பள்ளி அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி

Published On 2021-01-18 03:34 GMT   |   Update On 2021-01-18 03:34 GMT
குருபரப்பள்ளி அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி அருகே உள்ள நீலகிரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் கருப்பண்ணன் (வயது 22). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஆவல்நத்தம் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருப்பண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
Tags:    

Similar News