செய்திகள்
திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது
திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்களையும், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வாசன், ஏட்டு தேவநாதன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வேகமாக வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். ஸ்கூட்டரில் முன்பக்கம் இருந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அவர் திருக்கோவிலூரை அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிசங்கர்(வயது 45) என்பதும், திருவண்ணாமலையில் இருந்து 50 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு ரவிசங்கரை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்களையும், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை கடத்தி வந்தவரை பிடித்த போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி பாராட்டினார்.
திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வாசன், ஏட்டு தேவநாதன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வேகமாக வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். ஸ்கூட்டரில் முன்பக்கம் இருந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அவர் திருக்கோவிலூரை அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிசங்கர்(வயது 45) என்பதும், திருவண்ணாமலையில் இருந்து 50 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு ரவிசங்கரை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்களையும், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை கடத்தி வந்தவரை பிடித்த போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி பாராட்டினார்.