செய்திகள்
வழக்கு

மகளுக்கு பாலியல் தொல்லை- தந்தை மீது வழக்கு

Published On 2021-01-16 11:24 GMT   |   Update On 2021-01-16 11:24 GMT
ராமநாதபுரம் அருகே 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தந்தை மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. இவரது தாய், தந்தை தொடர்பான விவாகரத்து வழக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்ற போது மகள் என்றும் பாராமல் தந்தை தனக்கு பாலியல் தொல்லை செய்ய முயன்றதாக பரபரப்பு புகார் தெரிவித்தாள். 

இந்த புகாரின் அடிப்படையில் நீதித்துறை நடுவர் நீதிபதி சிறுமியை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் சிறுமி தந்தையே தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்று வந்தார் என வாக்குமூலம் அளித்துள்ளாள். இதனை தொடர்ந்து நீதிபதி உத்தரவின்பேரில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக 44 வயதான தந்தை மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News