செய்திகள்
கமுதி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
கமுதி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கமுதி:
கமுதி அருகே கரிசல்புளிகே.வேப்பங்குளம் கொம்பூதி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களை ஒரு சில இளைஞர்கள் வழிமறித்து செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்து செல்வதாக கோவிலாங்குளம் போலீசாருக்கு, தொடர்ந்து புகார்கள் வந்தன. இதை அடுத்து அந்தபகுதியில் கோவிலாங்குளம் காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் சந்தேகப்படும்படியான பகுதியில் சுற்றித்திரிந்த மறவர் கரிசல்புளியை சேர்ந்த சிவலிங்கம் மகன் செல்லபாண்டி (வயது18) கடலாடியை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் குமார் (25), ராமமூர்த்தி மகன் தினேஷ் (26) உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் 3 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது சாயல்குடி கோவிலாங்குளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கமுதி அருகே கரிசல்புளிகே.வேப்பங்குளம் கொம்பூதி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களை ஒரு சில இளைஞர்கள் வழிமறித்து செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்து செல்வதாக கோவிலாங்குளம் போலீசாருக்கு, தொடர்ந்து புகார்கள் வந்தன. இதை அடுத்து அந்தபகுதியில் கோவிலாங்குளம் காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் சந்தேகப்படும்படியான பகுதியில் சுற்றித்திரிந்த மறவர் கரிசல்புளியை சேர்ந்த சிவலிங்கம் மகன் செல்லபாண்டி (வயது18) கடலாடியை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் குமார் (25), ராமமூர்த்தி மகன் தினேஷ் (26) உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் 3 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது சாயல்குடி கோவிலாங்குளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.