செய்திகள்
திருச்சியில் அரசு பஸ் மோதி என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
திருச்சியில் அரசு பஸ் மோதி என்ஜினீயர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி:
திருச்சி தில்லைநகர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 52). இவர் திருச்சியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஸ்கூட்டரில் டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து தலைமை தபால் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார். அவரது உதவியாளர் திருப்பத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தஞானஜோதி (64) என்பவர் பின்னால் அமர்ந்து இருந்தார்.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே அவர்கள் வந்தபோது மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வந்த அரசு பஸ் ஒன்று பச்சை சிக்னல் விழுவதற்கு முன்பாக வேகமாக சென்றபோது கணபதி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களில் சம்பவ இடத்திலேயே கணபதி பலியானார்.
இதுகுறித்து தகவல் கிடைத்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஞானஜோதியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிணமாக கிடந்த கணபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் மீராபாய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானஜோதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஇறந்தார்.
திருச்சி தில்லைநகர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 52). இவர் திருச்சியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஸ்கூட்டரில் டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து தலைமை தபால் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார். அவரது உதவியாளர் திருப்பத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தஞானஜோதி (64) என்பவர் பின்னால் அமர்ந்து இருந்தார்.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே அவர்கள் வந்தபோது மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வந்த அரசு பஸ் ஒன்று பச்சை சிக்னல் விழுவதற்கு முன்பாக வேகமாக சென்றபோது கணபதி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களில் சம்பவ இடத்திலேயே கணபதி பலியானார்.
இதுகுறித்து தகவல் கிடைத்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஞானஜோதியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிணமாக கிடந்த கணபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் மீராபாய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானஜோதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஇறந்தார்.