செய்திகள்
மரணம்

கோவையில் மண் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

Published On 2021-01-08 11:57 GMT   |   Update On 2021-01-08 11:57 GMT
கோவையில் மண் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை சித்தாபுதூர் அருகே உள்ள ஹரிபுரத்தை சேர்ந்தவர் பட்டிலிங்கம். இவரது மகன் ராஜசேகர் (வயது 40). கூலித்தொழிலாளி. திருமணமாகவில்லை. இவர் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார்.

நேற்று இரவு ராஜசேகர், அவரது தாய் சரஸ்வதி ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் இவரது வீட்டின் மண் சுவர் திடீரென மேற்கூரையுடன் இடிந்து விழுந்தது. இதில் படுத்து தூங்கி கொண்டு இருந்த ராஜசேகர், அவரது தாய் சரஸ்வதி ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினர்.

இதில் ராஜசேகர் பரிதாபமாக இறந்தார். அவரது தாய் தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News