செய்திகள்
அழகர் கோவில் அருகே என்ஜினீயர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை
அழகர்கோவில் அருகே என்ஜினீயர் வீட்டில் கதவை உடைத்து 46 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
மேலூர்:
அழகர் கோவில் அருகே உள்ள அ.வலையப்பட்டியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 70), சிவில் என்ஜினீயரான இவர் மனைவி, மகளுடன் வசித்து வருகிறார்.
சோமசுந்தரத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக மதுரை மூன்று மாவடியில் தற்காலிகமாக வாடகைக்கு வீடு பார்த்து வசித்து வந்தார்.
நேற்று வலையப்பட்டி வீட்டுக்கு வந்த சோமசுந்தரம் வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்மநபர்கள் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 46 பவுன் நகை, ரூ.18 ஆயிரம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து மேலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இந்த கொள்ளை குறித்து மேலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. ரகுபதி ராஜா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அழகர் கோவில் அருகே உள்ள அ.வலையப்பட்டியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 70), சிவில் என்ஜினீயரான இவர் மனைவி, மகளுடன் வசித்து வருகிறார்.
சோமசுந்தரத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக மதுரை மூன்று மாவடியில் தற்காலிகமாக வாடகைக்கு வீடு பார்த்து வசித்து வந்தார்.
நேற்று வலையப்பட்டி வீட்டுக்கு வந்த சோமசுந்தரம் வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்மநபர்கள் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 46 பவுன் நகை, ரூ.18 ஆயிரம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து மேலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இந்த கொள்ளை குறித்து மேலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. ரகுபதி ராஜா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.