செய்திகள்
நீரில் மூழ்கி பலி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Published On 2021-01-08 09:20 GMT   |   Update On 2021-01-08 09:20 GMT
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த அஸ்தகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. கூலித்தொழிலாளி இவரது மகன் திவாகரன் (வயது 17). இவர் கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திவாகரன் மாங்கரையில் உள்ள தனது உறவினர் சிவக்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று தனது உறவினர்கள் 7 பேருடன் வேனில் ஒகேனக்கல்லுக்கு சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் ஊட்டமலை காவிரி ஆற்றில் குளித்தனர்.

அப்போது திவாகரன் ஆழமான பகுதிக்கு சென்றதால் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கி இறந்த பள்ளி மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News