செய்திகள்
தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்பனை: 2 பேர் கைது
தஞ்சை புதிய பஸ் நிலையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை புதிய பஸ் நிலையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சாமந்தபாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் சமது(வயது 32) என்பதும், லாட்டரி சீட்டு விற்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் சமதுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தெற்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பாலாஜி நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற மருத்துவக்கல்லூரி சாலை பொன்நகர் வாரியை சேர்ந்த முரளி(21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை புதிய பஸ் நிலையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சாமந்தபாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் சமது(வயது 32) என்பதும், லாட்டரி சீட்டு விற்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் சமதுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தெற்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பாலாஜி நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற மருத்துவக்கல்லூரி சாலை பொன்நகர் வாரியை சேர்ந்த முரளி(21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.