செய்திகள்
கொலை

பென்னாகரம் அருகே வனப்பகுதியில் ரூ.1,500-க்காக தொழிலாளி அடித்துக்கொலை

Published On 2021-01-05 04:08 GMT   |   Update On 2021-01-05 04:08 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப்பகுதியில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒட்டப்பட்டி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முட்புதரில் ஆண் பிணம் கிடந்தது. இதுதொடர்பாக பென்னாகரம் போலீசுக்கு வனத்துறையினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பென்னாகரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், இறந்து கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம் கொடகரையை சேர்ந்த மாடு மேய்க்கும் தொழிலாளி ருத்ரப்பா (வயது 60) என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ருத்ரப்பா கொலை செய்யப்பட்டது அம்பலம் ஆனது.

அதே ஊரை சேர்ந்த வீரப்பன் மகன் ருத்ரப்பன் (35). இவர் ருத்ரப்பாவின் உறவினர் ஆவார். ருத்ரப்பா வைத்திருந்த ரூ.1,500-க்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ருத்ரப்பனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News