செய்திகள்
கோப்புப்படம்

திருமுல்லைவாயலில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 34 பவுன் நகை திருட்டு

Published On 2021-01-04 20:59 GMT   |   Update On 2021-01-04 20:59 GMT
திருமுல்லைவாயலில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பீரோவில் இருந்த 34 பவுன் நகை திருட்டு போனதாக போலீசில் புகார் செய்தார்.
ஆவடி:

திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் செல்லதுரை (வயது 39). இவர், சென்னை புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர், நேற்று திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது வீட்டின் பீரோவில் 50 பவுன் நகை வைத்திருந்தேன். 2 மாதங்களுக்கு முன்பு அதை பார்த்தேன். கடந்த மாதம் 20-ந் தேதி சொந்த ஊரான தென்காசி ெசல்வதற்காக பீரோவில் இருந்த நகையை எடுத்தபோது அதில் சுமார் 34 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரிந்தது.

அதன்பிறகு வீட்டுக்குள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் நகையை காணவில்லை. இதுபற்றி விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

அதன்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 34 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனரா? என விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News