செய்திகள்
கோப்புபடம்

ஆத்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2021-01-04 14:12 GMT   |   Update On 2021-01-04 14:12 GMT
ஆத்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள பழனியாபுரம் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். லாரி டிரைவர். இவரது மனைவி உஷா (வயது 38). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. 

இளமதி என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் உஷா கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த உஷா கடந்த 28-ந் தேதி மாலை உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

இதில் படுகாயம் அடைந்த உஷா ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உஷா சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News