செய்திகள்
திசையன்விளை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திசையன்விளை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை செல்வமருதூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 20). இவர் பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து திசையன்விளை போலீசார், சுரேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.