செய்திகள்
கோப்புபடம்

விஷம் குடித்து பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2021-01-04 13:00 GMT   |   Update On 2021-01-04 13:00 GMT
கூத்தாநல்லூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள செருவாமணி தெற்கு தெருவை சேர்ந்த முருகானந்தம் மனைவி அகிலா (வயது45). இவரது மகள் லாவண்யாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. 

இதனால் மகளின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லையே என்று அகிலா மனவேதனையில் இருந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அகிலா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகிலா பரிதாபமாக இறந்தார். .இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News