செய்திகள்
நொய்யல் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
நொய்யல் அருகே மணல் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மணல் மூட்டைகள் பறிமுதல் செய்தனர்.
நொய்யல்:
கரூர் தவிட்டுப்பாளையம் திருக்காடுத்துறை காவிரி ஆற்று பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது காவிரி ஆற்றில் மணல் கடத்தி கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த ஜான் (வயது 24), சுல்தான் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.