செய்திகள்
கோப்புபடம்

நொய்யல் அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2021-01-03 12:58 GMT   |   Update On 2021-01-03 12:58 GMT
நொய்யல் அருகே புன்னம்சத்திரம் பகுதியில் அரசு டாஸ்மாக் பின்புறம் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

நொய்யல் அருகே புன்னம்சத்திரம் பகுதியில் அரசு டாஸ்மாக் பின்புறம் மது விற்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை சேர்ந்த பால்ராஜ் (வயது 32) என்பவரையும், மூலிமங்கலம் பிரிவு அருகே மது விற்ற ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மேல்பண்ணையூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவரையும் வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் தோகைமலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில், மது விற்றதாக வேங்கடத்தான்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் (35), மணப்பாறை தாலுகாவை சேர்ந்த லூயின் (45), தோகைமலை பஸ் நிலைய பகுதியை சேர்ந்த ரத்தினம் (53), தோகைமலை தெற்கு பள்ளத்தை சேர்ந்த பாலக்குமரன் (35) நாடக்காப்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (53) ஆகிய 5 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும் அவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News