செய்திகள்
வேப்பம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
வேப்பம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கிருஷ்ணராயபுரம் பகுதிக்கு உட்பட்ட கருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கரூர்-கோவை ரோட்டில் உள்ள வேப்பம்பாளையம் அருகே சாப்பிடுவதற்காக சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.