செய்திகள்
தற்கொலை

திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-01 22:18 GMT   |   Update On 2021-01-01 22:18 GMT
திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் காவியா என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தூங்க சென்று விட்டனர். அதிகாலையில் பரந்தாமன் எழுந்து பார்த்தபோது, ஜெயந்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நசரத்பேட்டை போலீசார் இறந்து கிடந்த ஜெயந்தி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பண பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக ஜெயந்தி தற்கொலை செய்துகொண்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News