செய்திகள்
பாக்கியலட்சுமி

கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2020-12-31 14:57 GMT   |   Update On 2020-12-31 14:57 GMT
துவரங்குறிச்சி அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சியை அடுத்த வேம்பனூர் சிலோன் காலனியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் பாக்கியலட்சுமி(வயது 17). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார்.

இந்த நிலையில், தனது செல்போனில் பிரியா என்ற பெயரில் உள்ள எண்ணுக்கு சொந்தக்காரன்தான் எனது சாவுக்கு காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News