செய்திகள்
கோப்புபடம்

பல்லடத்தில் கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-12-31 12:04 GMT   |   Update On 2020-12-31 12:04 GMT
பல்லடம் அருகே கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் முகமது குட்டிமகன் ஜாபர் அலி, (வயது 42). இவருக்கு அஜ்மாபானு என்ற மனைவியும், ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். பல்லடம் மங்கலம் ரோட்டில் பிளாஸ்டிக் கதவு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி மனைவியுடன் ஏற்பட்ட குடும்பதகராறில் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியோடு மீட்டு அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி அஜ்மாபானு கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News