செய்திகள்
மழை

ஜனவரி 10 வரை வடகிழக்கு பருவமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-12-31 08:07 GMT   |   Update On 2020-12-31 08:07 GMT
தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 10 வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 10 வரை வடகிழக்கு பருவமழை தொடரும்.

* வடகிழக்கு பகுதியில் இருந்து தொடர்ந்து காற்று வீசிக்கொண்டிருப்பதால் மழை தொடரும்.

* வடகிழக்கு பருவமழை இயல்பு அளவான 449.7 மி.மீ.க்கு பதில் 477 மி.மீ. பதிவானது

* தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகம் பதிவாகி உள்ளது.

* தென்மேற்கு பருவமழை 342 மி.மீ.க்கு பதில் 421 மி.மீ. பதிவானது. இது இயல்பை விட 24 சதவீதம் அதிகம்.

* 2020ம் ஆண்டில் 946 மி.மீ.க்கு பதிலாக 984 மி.மீ. மழை பதிவானது. இது இயல்பை விட 4 சதவீதம் அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News