செய்திகள்
கைது

மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது

Published On 2020-12-31 02:07 GMT   |   Update On 2020-12-31 02:07 GMT
மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிவப்பிரகாசை சிறையில் அடைத்தனர்.
காரமடை:

கோவையை அடுத்த காரமடை அருகே குட்டையூர் அஜந்தா காலனியில் வசித்து வருபவர் விஜய பிரசாத் (வயது 28). சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் அவர் வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காண வில்லை. இந்த நிலையில் விஜயபிரசாத், நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு காரமடைக்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வாலிபர், விஜயபிரசாத்தின் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அந்த வாலிபரை மடக்கி பிடித்து காரமடை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், கவுண்டம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த சிவப்பிரகாஷ் (வயது 31) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிவப்பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News