செய்திகள்
பருத்தி ஏலம்

நாமக்கல்லில் ரூ‌.1.30 கோடிக்கு பருத்தி ஏலம்

Published On 2020-12-30 04:37 GMT   |   Update On 2020-12-30 04:37 GMT
நாமக்கல்லில் 6 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு ஏலம் போனது.
நாமக்கல்:

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று நாமக்கல்லில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அருகாமை மாவட்டங்களில் இருந்தும் 6 ஆயிரம் பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

அந்த பருத்தி மூட்டைகள் ரூ.ஒரு கோடியே 30 லட்சத்துக்கு விற்பனையானது. ஒரு குவிண்டால் ஆர்.சி.எச். ரக பருத்தி ரூ.5 ஆயிரத்து 500 முதல் ரூ.6 ஆயிரத்து 519 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி ரூ.5 ஆயிரத்து 919 முதல் ரூ.7 ஆயிரத்து 469 வரையிலும் ஏலம் போனது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.
Tags:    

Similar News