செய்திகள்
வீரபாண்டி அருகே சூதாடிய 5 பேர் கைது
வீரபாண்டி அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்புக்கோட்டை:
வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையிலான போலீசார் கோட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கோட்டூர் ஆலமர தெருவை சேர்ந்த முத்துவேல் (வயது 42), ஆர்.சி. தெருவை சேர்ந்த அந்தோணி (51), தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோ (35), கோபால் (46), அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த முகமது (56) ஆகிய 5 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.600 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.